Wednesday, January 19, 2011

देवरः/தேவரர்

ஸத்யார்த்த பிரகாஶம் - மகரிஷி தயாநந்த ஸரஸ்வதி
பக்கம் - 147
தேவரர்
देवरः कस्माद् द्वितीया वर उच्यते ।। (नृक्तम् 3-15)
देवराद् वा सपिणडाद् वा स्त्रिया सँयङ् नियुक्तया ।
प्रजेप्सिताधिगन्तव्या सन्तानस्य परिक्षये ।।मनु 9-58।।
ज्येष्ठो यवीयसो भार्य्यो यवीयान्वाग्रजस्त्रियम् ।
पतितो भवतो गत्वा नियुक्तावप्यनापदि ।।मनु 9-59।।
औरसः क्षेत्रजश्चैव ।।मनु 9-159।।
தன் புருஷனுடைய தமையன், தம்பி, மைத்துனன், கணவனின் ஆறாவது வம்ஶத்திற்கு உட்பட்ட உறவின்முறையாருடன், உறவு, சுற்றம் யாராயினும் ஒரு விதவையின் இரண்டாம் புருஷன் தேவரர் எனப்படுகிறார்.
பக்கம் - 148
प्रोषितो धर्मकार्यार्थं प्रतीक्ष्योष्टौ नरः समाः ।
विद्यार्थं षड्यशोर्थं वा कामार्थं त्रींस्तु वत्सरान् ।।मनु 9-76।।
குலப்பெண், தனது கணவர் தர்மார்த்தமாகப் பரதேஶஞ் சென்றிருந்தால் எட்டாண்டுகள், கல்வி, புகழுக்காக சென்றிருந்தால் ஆறாண்டுகள், பொருளீட்டல் முதலிய விருப்பங்களை நிறைவேற்றச் சென்றிருந்தால் மூன்றாண்டுகள் பொறுத்திருந்து பிறகு நியோகம் கொண்டு சந்ததி வளர்க்கவேண்டும். சொந்தக் கணவன் வந்ததும் நியோக பதியை விலக்கவேண்டும்.
பக்கம் - 149
वन्ध्याष्टमेधिवेद्याब्दे दशमे तु मृतप्रजा ।
एकादशे स्त्रीजननी सद्यस्त्वप्रियवादिनी ।।मनु 9-81।।
அதேமாதிரி புருஷனும் மனைவி மலடானால் கலியாணமானது முதல் எட்டாண்டுகள், குழந்தைகளெல்லாம் இறந்தால் பத்தாண்டுகள், பெண் குழந்தைகளே பெற்றால் பதினோராண்டுகள் பொறுத்தும், அடங்காப் பிடாரி, சண்டைக்காரி, வாய்ப்பட்டியானால் உடனேயும் நியோகம் செய்துகொண்டு மற்றொரு பெண் மூலம் சந்ததியை வளர்க்கவேண்டும்.
அவ்வாறே புருஷன் பொறுக்கமுடியாத இடும்பை செய்தால், துயரீந்தால், நோயாளியானால், மனைவியும் நியோகங்கொண்டு அதனால் பிறக்கும் மகவிற்கு கணவனின் சொத்தைத் தரவேண்டும். விவாகத்தால் பிறந்த ஔரஸ் புத்திரன், தந்தையின் சொத்திற்குரியவனாதல் போலவே, நியோகத்தாற் பிறந்த க்ஷேத்ரஜ புத்திரனும் தயாபாகத்திற்குரியவனாகிறான்.

No comments:

Post a Comment